காதல் கவுஜைகள்

இன்று ஒரு காதல் கவிதையைப் படித்ததும் எனக்குள்ளும் காதல் கவுஜைகள் பொங்கின. அப்படிப் பொங்கின சில இன்ஸ்டண்ட் கவுஜைகள் இங்கே....

பூவே
உன்னையும் நேசிக்கிறேன்
என்னவளின் தலையில் இருப்பதால்

*************

பாவம் பொற்கொல்லன்
அவனுக்குத் தெரியவில்லை
என்னவளின் பாதம் பட்ட இடமெல்லாம்
தங்கத்துகளென்று

*************

கவிதை எழுதக்
காகிதம் எடுத்தேன்
காகிதத்தில் உன் முகம்
கிறுக்க மனம் வரவில்லை

*************

என் சுவாசத்தை விட
உன் மீதான் நேசம் பெரிது
சுவாசிக்க மறந்தாலும்
உன்னை நேசிக்க மறந்ததில்லை

*************

வேதியியலின் பேரதிசயம் நீ
சுவாசிக்கும் காற்றில்
உள்ளிழுக்கும்போது ஆக்ஸிஜனாகவும்
வெளிவிடும்போது கார்பன் டை ஆக்ஸைடாகவும்
இரட்டை வேடம் பூணுகிறாய்

*************

என் டி.என்.ஏவைப் படம்பிடித்த
விஞ்ஞானி அதிர்ச்சியில் இருக்கிறான்
ஒவ்வொரு மூலக்கூறிலும்
உன் முகமாம்

*************

நான் காலையிலிருந்து
பல் விளக்கவில்லை
நேற்று நீ கடித்துக் கொடுத்த எச்சில் மிட்டாய்
இன்னமும் என் பல்லிடுக்கில்

*************

பெண்களில் நீ ஒரு த்ரீ ரோஸஸ்
அழகும்
அறிவும்
காதலும்
நிறைந்தவள்

*************

புதிதாய் கொஞ்சம் சேர்க்கப்பட்டது

பத்து நாளாய் குளிக்கவில்லையா
பக்கத்தில் வராதே என்கிறாய்
குளிக்கையில் என் கன்னத்தில் பதிந்த
உன் முத்த உதடுகள் உதிர்ந்திடுமோ
என்ற என் பயத்தை எப்படிச் சொல்ல??

*************

காடாய் வளர்ந்துவிட்டதாம்
என் தலைமயிர்
அம்மாவின் புலம்பல்
அவருக்கெங்கே தெரியும்
அவை உன் விரல்களால்
கோதப்பட்ட
பாக்கியம் பெற்றவையென

*************

நீ ஊட்டிவிடும் கவளத்தை
அப்படியே விழுங்குகிறேன்
உன் விரல் பட்ட
சோற்றுக்கு வலிக்குமென

*************

ரசிகர்களின் பேராதரவைத் தொடர்ந்து இன்னும் பல கவிதைகள் எழுதலாம் என்று எண்ணம்

11 மறுமொழிகள்:

குசும்பன் said...

கலைஞரின் அடுத்த படத்துக்கு ஒரு நாயகன் இங்கே உருவாகிறார் போல!!!

வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

ஒரு சாயலில் அப்படியே பா.விஜய் சாயல் தெரியுது சித்தப்பூ!

KVR said...

மாப்பி, ஐ லைக் யுவர் தொலைநோக்குச் சிந்தனை ;-)

ராம்ஜி_யாஹூ said...

nice

தினேஷ்குமார் said...

எல்லாமே அருமை நகைச்சுவை தளும்பும் கவிதை வரிகள்

Chinnapaiyan said...

போங்க தலைவரே ...... மானே தேனே இல்லாமே என்ன காதல் கவிதை இது.
மானே தேனே போட்டு நாளைக்கு மறுபடியம் ஒரு காதல் கவிதை எழுதிட்டு வாங்க

KVR said...

@ராம்ஜி & தினேஷ் - சும்மா கிண்டலுக்கு எழுதினது. நன்றி

@சின்னப்பையன் - அடுத்த தபா எழுதிடுவோம் :-P

விஜி said...

ம்ம் இப்பவே இப்படின்னா?? காதலிக்கற காலத்திலே? முருகா டமிலுக்கு இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் வரப்போவுதோ????????????

KVR said...

@விஜி - அப்போ அப்படில்லாம் எழுதினது இல்லை. எழுதி இருந்தா காதல் ஒகே ஆகி இருக்காது ;-)

இப்னு ஹம்துன் said...

வாழ்க K aதல் V aaதி Raஜா !

ஆதிமூலகிருஷ்ணன் said...

அய்யா.. சாமீ.. ஆனாலு டெரர் கவிதைகள்பா.. இத ஒரு தொழிலாகவே பண்றீங்களா.?